உறவுகளுக்காக எம் ஊர் செய்திகள்

வியாழன், 4 மார்ச், 2010

குறிகாட்டுவான் பிரதேச அபிவிருத்திக்கு மூன்று மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு




புங்குடுதீவு குறிகாட்டுவான் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந் திரசிறியினால் மூன்று மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென்னிலங்கையிலிருந்து வரும் உல்லாசப் பயணிகள் நயினாதீவுக்குச் செல்வதால் குறிகாட்டுவான் பகுதியில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யும் பொருட்டு ஆளுநரினால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்நிதியினைப் பயன்படுத்தி குறிகாட்டுவான் பகுதியில் மலசல கூடங்கள், வாகனத்தரிப்பிடம் மற்றும் பயணிகள் தங்குவதற்கான இடம் என்பன கட்டப்பட்டுவருகின்றன.

வேலணை பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பன இணைந்து இந்நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளன. இதேவேளை அப்பகுதியில் 10 மலசலகூடங்களை அமைத்துக் கொடுப்பதற்கு சேவாலங்கா நிறுவனம் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு