உறவுகளுக்காக எம் ஊர் செய்திகள்

ஞாயிறு, 21 மார்ச், 2010

இணைய முகவரி மாற்றம்

அன்பு வாசகர்களே!
www.pungay.tk என்ற முகவரிக்குப் பதிலாக இனி www.pungudutheevu.tk என்ற முகவரியில் பாருங்கள்.சிரமத்துக்கு மன்னிக்கவும்.
அன்புடன்
ஆசிரியர்

ஞாயிறு, 14 மார்ச், 2010

புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய விளையாட்டுப் போட்டி

புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் இல்லங்களுக்கிடையிலான வருடாந்த மெய்வல்லுநர் போட்டி 13.03.2010அன்று வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

அதிபர் ந.நாகராசா தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

போட்டியின் இறுதியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் இல்லங்களுக்குமான பரிசில்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.


திங்கள், 8 மார்ச், 2010

புங்குடுதீவில் பெருக்கு மரம்




புங்குடுதீவில் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த பெருக்குமரம் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இதைவிட வெளிச்சவீடு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நெடுந்தீவுத நயினாதீவு ஆகிய இடங் களிலுள்ள மக்கள் தமது பயணத்தை மேற் கொள்ளும் பிரதான பாதையில் புங்குடுதீவு அமைந்துள்ளது.இங்குள்ள பிரதான வீதியில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. தற் போதைய நிலையில் புங்குடுதீவு ஒரு உல்லாசப் பயணிகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக மாறிவருகிறது. ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் எவையும் செய்துகொடுக்கப்படாத நிலை காணப்படுகிறது
நயினாதீவுக்குச் செல்லும் தென்னி லங்கை மக்கள் தங்குவதற்கு வசதியாக குறி காட்டுவான் பிரதேசம் மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. ஏனைய பிரதே சங்கள் எந்தவித அபிவிருத்திப் பணிகளும் செய்து முடிக்கப்படாமல் காணப்படுகின்றன. குறிப்பாக பிரதான வீதிகள் ஓரளவு சீரான நிலையில் உள்ளபோதிலும் உட்பகுதிகளில் உள்ள ஏனைய வீதிகள் பழைமை வாய்ந்த வையாக- நீண்டகாலம் புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றன.
இவற்றை புனரமைப்பதற்கு நிதி ஒதுக் கீடுத புனரமைப்புப் பணிகள் ஆரம்பமாகும் என பல கதைகள் வெளிப்படுகின்ற போதும் அதனை நடைமுறைப்படுத்த எவரும் முன் வருவதில்லை. இவ்வாறான நிலையில் புங்குடுதீவில் இரு புராதன இடங்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன.பெருக்குமரம்இங்கு மிகப் பெரிய பெருக்குமரம் ஒன்று இறுப்பிட்டிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இறுப்பிட்டி சித்திவிநாயகர் வித்தியால யத்துக்கு முன்பாகவுள்ள ஒழுங்கைக்குள் இம் மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வந்த போதுத அவர்கள் கொண்டு வந்த குதிரை களுக்கு உணவு போடுவதற்காக இந்த பெருக்குமரம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப் படுகின்றது. இவை கிட்டத்தட்ட 400 வருடங் கள் பழமைவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பெருக்குமரத்தின் இலைகளை உள் ளூரிலுள்ள விலங்குகள் உண்பதில்லை என்பதால் இம் மரம் மிகப் பெரிதாக வளர்ந் துள்ளதாகக் கூறப்பட்டது.
இவை இலங்கையில் மன்னார்த நெடுந்தீவு ஆகிய இடங்களிலேயே காணப்படுவ தாக முதலில் கூறப்பட்டது. தற்போது அது புங்குடுதீவுப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.பழமைவாய்ந்த வெளிச்சவீடு இதைவிட புங்குடுதீவின் புராதன சின்ன மான வெளிச்ச வீடும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இவ் வெளிச்சவீட்டைச் சூழவுள்ள பகுதி யில் கடற்படையினரின் முகாம் நீண்ட கால மாகக் காணப்பட்டதால் அப் பகுதிக்கு மக்கள் செல்வதில்லை. ஆனால் தற்போது அப் பகுதியிலிருந்து கடற்படையினர் வெளியேறியுள்ள நிலை யில் வெளிச்சவீட்டின் புனரமைப்புப் பணி கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள் ளது. இது புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தி லுள்ள கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு அண்மையாகக் காணப்படுகின்றது.வெளிச்சவீட்டுக்கு அண்மையாகவுள்ள கிணற்றுக்குள் பழைமைவாய்ந்த காஸ் சிலிண்டர் ஒன்றும் காணப்படுகின்றது.பெருக்குமரம் மற்றும் வெளிச்சவீட்டுப் பகுதிகளை வேலணைப் பிரதேச செயலக நந்தகோபாலன் தலைமையிலான குழு வினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ள துடன் அவற்றை உல்லாசப் பயணிகள் பார்வையிடுவதற்கு ஏற்றவகையில் அமைப் பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளது. இவற்றின் புனரமைப்பு மற்றும் புங்குடு தீவின் அபிவிருத்தி என்பன அப்பகுதி மக்க ளின் வாழ்வாதாரங்களை அதிகரிக்கும் என்பதால் உரிய தரப்பினர் புங்குடுதீவுப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

வியாழன், 4 மார்ச், 2010

குறிகாட்டுவான் பிரதேச அபிவிருத்திக்கு மூன்று மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு




புங்குடுதீவு குறிகாட்டுவான் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந் திரசிறியினால் மூன்று மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென்னிலங்கையிலிருந்து வரும் உல்லாசப் பயணிகள் நயினாதீவுக்குச் செல்வதால் குறிகாட்டுவான் பகுதியில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யும் பொருட்டு ஆளுநரினால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்நிதியினைப் பயன்படுத்தி குறிகாட்டுவான் பகுதியில் மலசல கூடங்கள், வாகனத்தரிப்பிடம் மற்றும் பயணிகள் தங்குவதற்கான இடம் என்பன கட்டப்பட்டுவருகின்றன.

வேலணை பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பன இணைந்து இந்நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளன. இதேவேளை அப்பகுதியில் 10 மலசலகூடங்களை அமைத்துக் கொடுப்பதற்கு சேவாலங்கா நிறுவனம் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

புங்குடுதீவின் தற்போதய நிலைகலை விளக்கும் படங்கள்

















புங்குடுதீவின் தற்போதய நிலைகலை விளக்கும் படங்கள்





செவ்வாய், 2 மார்ச், 2010

யாழ். புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா

யாழ். புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்தின் நூற் றாண்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வு இன்று புதன்கிழமை காலைத மாலை இரு நிகழ்வுகளாக நடை பெறவுள்ளது.

இதில் வித்தியாலய அதிபர் எஸ்.கே. சண்முகலிங்கம் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வில் வித்தியாலய பெயர் திரைநீக்கம் மற்றும் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவனால் நூற்றாண்டு நினைவுக்கல் திரை நீக்கம் ஆகியன இடம்பெறவுள்ளன.

தொடர்ந்து நிகழ்வில் சிறப்பு ரையை யாழ். பல்கலைக்கழக புவி யியற் துறைத் தலைவர் பேராசிரியர் கா.குகபாலன் வழங்கவுள்ளார்.

மேலும் செல்வி சைந்தவி பரமேஸ் வரனின் இன்னிசைக் கச்சேரியும் ஏனைய கலை நிகழ்ச்சிகளும் நடை பெறவுள்ளன.

மாலை நிகழ்வுகள் நூற்றாண்டு விழாக் குழுத்தலைவர் த.துரைசிங் கம் தலைமையில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும். நிகழ்வில் 'கணேசதீபம்'டு என்னும் நூற்றாண்டு மலர் வெளியி டப்படவுள்ளதுடன் நூல் வெளியீட் டுரையை பேராசிரியர் எஸ்.சிவலிங் கராசா வழங்கவுள்ளார்.













தொடர்ந்து தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர் சொல்வேந்தர் சுகி சிவம் ஈஈஎது கல்விடுடு என்னும் விடயம் பற்றி சிறப்புரை வழங்கவுள்ளார்.